சென்னை: நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் புலி படத்தைத் தொடர்ந்து ராஜா ராணி படப்புகழ் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இரண்டு வேடங்களில் இப்படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் ஒரு வேடத்தில் போலீசாக நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்னொரு வேடம் ரகசியமாக வைக்கப் பட்டு இருந்தது. தற்போது அந்த இன்னொரு வேடத்தைப் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் முறையாக இந்தப் படத்தில் அப்பா வேடத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். ஒரு படம் முழுவதும் அப்பாவாக விஜய் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறை. கத்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த விஜய் தற்போது இந்தப் படத்திலும் இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். போக்கிரி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக காக்கிச்சட்டை அணியவிருக்கிறார்.
புலி படத்தின் டப்பிங் வேளைகளில் பிசியாக இருக்கும் விஜய் அதனை முடித்துக் கொடுத்துவிட்டு இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். படப் பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க இருக்கிறார் இயக்குனர் அட்லீ. அனிருத் இசையமைக்க விருக்கும் இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கப் போவது கலைப்புலி எஸ்.தாணு.
பாசமான அப்பாவா வர்றாரா இல்ல பயங்கரமான அப்பாவா வரப்போறாரா...!
Post a Comment