ஒரு வழியாக ப்ளஸ் டூவில் 72 சதவீத மதிப்பெண்களுடன் தேறிவிட்ட நடிகை லட்சுமி மேனன், அடுத்து கல்லூரியில் சேரத் தயாராகி வருகிறார்.
லட்சுமிக்கு இலக்கியம் படிக்க ஆசையாம். எனவே கேரளாவில் உள்ள நல்ல கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சேரப் போகிறாராம். இப்போதைக்கு மூன்று கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ள அவர், அவற்றில் ஏதாவது ஒன்றில் சேரப் போவதாகக் கூறியுள்ளார்.
படித்துக் கொண்டே தொடர்ந்து நடிக்கும் தனது திட்டத்தை முன்கூட்டிய கூறி கல்லூரியில் இடம் கேட்டுள்ளாராம். அவர் விருப்பப்படி படிக்க கொச்சியில் உள்ள கல்லூரி நிர்வாகம் ஒன்றும் அனுமதி அளித்துள்ளது. .
ஏன் ஆங்கில இலக்கியம்?
"பொதுவா எனக்கு ஃபிக்ஷன்ஸ் ரொம்ப பிடிக்கும். அதுமட்டுமில்லாம சினிமாவுக்காக நிறைய டைம் ஒதுக்கவேண்டியிருக்கு. அதனாலயும் ஆங்கில இலக்கியம் செலக்ட் செய்திருக்கேன் என்றும் சொல்லலாம்," என்கிறார் லட்சுமி மேனன்.
Post a Comment