பெங்களூர்: இந்த வருடம் சினிமாவில் நடிகைகளின் மறுபிரவேச வருடம் போல. 16 வருடங்கள் கழித்து நடிகை மஞ்சு வாரியர் ஹௌ ஓல்ட் ஆர் யூ படத்திலும் அதே படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஜோதிகா சுமார் 8 வருடங்கள் கழித்தும் நடிக்க வந்தனர்.
இப்போது அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் நடிகை பிரியங்கா திரிவேதி. தமிழில் அஜித்துடன் ராஜா (அதில் ஜோதிகாவும் இன்னொரு ஹீரோயின்), விக்ரமுடன் காதல் சடுகுடு போன்ற படங்களில் நடித்த இவர் கன்னட நடிகர் உபேந்திராவைத் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டிலானார்.
தற்போது கன்னட திரை உலகின் பிரபல ஒளிபதிவாளரும், இயக்குனருமான தினேஷ் பாபுவின் இயக்கத்தில் பிரியங்கா என்ற படத்தில் நீண்ட வருடங்கள் கழித்து நடித்து இருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார்.
எல்லா இயக்குனர்களும் இனி ஹீரோயினுக்கு கதைய ரெடி பண்ணுங்கப்பா..!
Post a Comment