சென்னை: புஸு புஸு நடிகை கைவசம் படங்கள் இல்லாததால் வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடிக்க முன்வந்துள்ளாராம்.
கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் புஸு புஸு நடிகை. கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடியோடு நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் தான் தெலுங்கு திரை உலகில் செட்டில் ஆன சமத்து, முட்டைக் கண்ணழகி, வாரிசு நடிகை ஆகிய மூவரும் சொல்லி வைத்து போன்று ஒன்றாக தமிழ் படங்களில் கவனம் செலுத்தத் துவங்கினர்.
அந்த 3 நடிகைகளின் வரவால் புஸு புஸு நடிகையின் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இத்தனை நாட்களாக வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தார் புஸு புஸு நடிகை. தற்போது கையில் வெறும் 2 படங்கள் மட்டுமே உள்ளதால் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிக்க நான் ரெடி என்னை வைத்து படத்தை தயாரிக்க நீங்க ரெடியா என்று தயாரிப்பாளர்களுக்கு தூதுவிடுகிறாராம்.
இது தவிர இத்தனை நாட்கள் தெலுங்கு திரை உலகில் எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்ட மாட்டேன் என கூறி வந்தார் நடிகை. ஆனால் தற்போதோ நான் கவர்ச்சியாக நடிக்கிறேன் என தெரிவித்து வருகிறாராம் புஸு புஸு.
ஓஹோ என இருந்த மார்க்கெட் இவ்வளவு சீக்கிரம் டல்லடிக்கும் என்று நடிகை எதிர்பார்க்கவில்லையாம்.
Post a Comment