இந்தியாவின் முதல் சரித்திரப் பேய்ப் படம் என்ற அறிவிப்போடு வருகிறது ஜாக்சன் துரை.
ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் சார்ல் எம்எஸ் சரவணன் பிரமாண்டமாய் தயாரிக்கும் இந்தப் படம் இன்று படப்பிடிப்புடன் தொடங்கியது.
சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்' ராஜேந்திரன், இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழில் முதன் முறையாக ஹாலிவுட் நடிகர் ஜாக்கெரி அறிமுகமாகிறார்.
ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கஞ்ஜூரிங் படத்தின் ஒப்பனை தொழில் நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்படுகிறது.
தரணிதரன் இத்திரைப்படத்தின் கதை, திரைகதை, வசனம், எழுதி இயக்குகிறார்.
ஒளிப்பதிவு யுவராஜ், இசை சித்தார்த் விபின், படத்தொகுப்பை இந்த ஆண்டின் தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் கவனித்துக்கொள்கிறார். முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றும் இப்படத்தின் கதை, திரைக்கதை 1940 - ல் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் மிகுந்த பொருள் செலவில் மிக பிரமாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெறுகிறது.
ஜாக்சன் துரை திகிலும், நகைசுவையும் கலந்த பிரம்மாண்ட படமாக உருவாகிறது என்கிறார் இயக்குநர் தரணிதரன்.
Post a Comment