ஹைதராபாத் தெலுங்குலகில் மிகப் பெரிய ஹீரோக்களான சிரஞ்சீவியும் பாலகிருஷ்ணாவும் தங்கள் படங்களின் மூலம் நேரடியாக மோதிக் கொள்ள இருக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்குப் பின் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் படம் ஆட்டோ ஜானி இதன்பட பூஜை அவரின் பிறந்தநாளான ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி தொடங்க இருக்கிறது.
படம் அடுத்த வருடம் சங்கராந்தி ஸ்பெஷல் ஆக திரைக்கு வர இருக்கிறது அதே புனிதமான நாளில் தன் படமான டிக்டேட்டர் படத்தை திரைக்கு கொண்டுவர முடிவு செய்து இருக்கிறார் நந்தமூரி பாலகிருஷ்ணா இதனால் இருவரும் படங்களின் மூலமாக நேரடியாக மோதிக் கொள்ளவிருக்கிறார்கள்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு இது 150 வது படம் பாலகிருஷ்ணாவுக்கு அவரது 99 வது படம், அதோடு எப்போதுமே பாலகிருஷ்ணாவுக்கு சங்கராந்தி ஸ்பெஷல் தான் அந்த நாளில் அவர் தனது படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே இதே போல ஒரு சங்கராந்தியில் இருவரது படங்களும் சிலவருடங்களுக்கு முன்பு மோதியது இதில் பாகிருஷ்ணா படம் மெகா ஹிட் அடித்தது, பார்க்கலாம் இன்னும் ஒரு வருடம் இருக்கிறது அல்லவா அதற்குள் எது வேண்டுமானாலும் மாறலாம்.
நம்ம தமிழ் சினிமாவில நாலு நாளைக்குள்ள ஒரு படத்துக்கு மூணு தடவ பேர மாத்திட்டாங்க இதெல்லாம் ஒரு விஷயமா என்ன...
Post a Comment