கட்டிடம் முடிஞ்சாதான் கல்யாணம் –நடிகர் விஷால்

|

சென்னை: நடிகர் சங்கக் கட்டிடம் தொடர்பான விவகாரத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போதுமான நிதி இருந்தும் ஏன் இன்னும் சங்கக் கட்டிடத்தை கட்டவில்லை எனத் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வரும் நடிகர் விஷாலுக்கு ஆதரவாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பல இளம் நடிகர்களும் அவருடன் கைகோர்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

 Hero Vishal challenges About His Marriage

இதற்கு மேலும் திரிகிள்ளிப் போடும் விதமாக புதுக்கோட்டை நாடக நடிகர்களை சமீபத்தில் நடிகர் விஷால் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். இதனால் நடிகர் சங்கத்தில் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் தற்போதைய நடிகர் சங்கத்தலைவர் நடிகர் சரத்குமார் விஷாலின் ஆர்வத்தை நான் மதிக்கிறேன் ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவது முடியாத ஒன்று இது விஷாலுக்கே நன்கு தெரியும். கட்டிடம் கட்டுவது தொடர்பாக சில சட்டப்பூர்வமான வேலைகள் நடந்து வருகின்றன, ஆனால் விஷால் இதனைப் புரிந்து கொள்ளாமல் தனது பேட்டிகளில் தொடர்ந்து பல தவறான கருத்துக்களை கூறி வருகிறார்.

நடிகர் சங்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் விதமாக அவர் நடந்து கொள்கிறார், விஷால் சற்று அமைதி காக்க வேண்டும் என்று சரத்குமார் தனது பேட்டியில் கூறியிருந்த நிலையில், நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடித்த்து விட்டுத் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் நடிகர் விஷால். விஷாலுக்கு தற்போது 37 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் அலைஓய்ந்து தலை முழுகினார்ப் போலத்தான்...

 

Post a Comment