சென்னை: டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் நடிகர் சங்கத்தினர் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
க்யூப், யு.எப்.ஓ. மற்றும் பி.எக்ஸ்.டி. ஆகிய டிஜிட்டல் நிறுவனங்கள் தமிழ் சினிமாவின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு செலவை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன. தமிழ் சினிமா இந்த மூன்று நிறுவனங்களின் பிடியில் உள்ளது என்று சொல்லலாம். இந்நிறுவனங்களுக்கு எதிராக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தினர் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை காலை எட்டு மணிமுதல் மாலை 5 மணிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதில் அனைத்துத் திரையுலகினரும் கலந்து கொள்ளும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. அதன்படி, இந்த போராட்டத்தில் திரையுலகினர் கலந்து கொண்டுள்ளனர்.
Post a Comment