ஹீரோவாகும் காஞ்சானா -2 பேய் ஜெய ஆனந்த் - வெயிட்டிங்கில் 2 படங்கள்
சென்னை: காஞ்சனா -2 திரைப்படத்தில் பேய்களில் ஒருவராக நடித்து அசத்திய ஜெய ஆனந்த் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
முனி படத்தில் ஒரு பேய் வந்தது. காஞ்சனா படத்தில் 3 பேயைக் காட்டினார்கள். காஞ்சனா 2 படத்தில் அதுக்கும் மேலே போய் நிறைய பேய்களைக் காட்டி பயமுறுத்தினார் ராகவா லாரன்ஸ்.
அந்த வகையில், காஞ்சனா-2 படத்தில் திக்குவாய் பேயாக வந்து அனைவரையும் கவர்ந்தவர் ஜெய ஆனந்த். இவர் இப்போது வேறு அவதாரம் பூண்டுள்ளார். ஆம் ஹீரோவாகி விட்டார்.
ஜெய ஆனந்த், தற்போது இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றார். இவர் "கண்ணாமூச்சி' என்ற குறும்படத்திற்காக சென்ற வருடம் சிறந்த நடிகர் 2014 விருது வாங்கியிருக்கிறார்.
தற்போது கதாநாயகனாக நடித்திருக்கும் "திறப்புவிழா", மு.களஞ்சியத்தின் "ஆனந்த மழை" படங்கள் விரைவில் வெளியாகின்றன. மேலும் ஒரு பெரிய படத்தில் வில்லனாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment