இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!

|

இது ஒன்றும் படத்தின் கதை குறித்த அறிவிப்பல்ல... ஒரு புதிய படத்தின் தலைப்பு.

கோல்டன் ஹார்ஸ் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சரண் சக்கரவர்த்தி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அகன்ஷா மோகன் என்ற புதுமுகம் நடிக்கிறார்.

Ithirayil Varum Sambavangal Anaithum Karpaniye

நிழல்கள் ரவி, ஒய்ஜி மகேந்திரன், சண்முகசுந்தரம், ஜார்ஜ்மரியம், ஜிகிர்தண்டா ராம்ஸ், அருள்ஜோதி, ராஜேந்திரன், சிங்கம்புலி, ஜெயமணி, சபரிநாதன், காளையன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மரியா ஜெரால்ட் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பதி, கவுதம் சேதுராம் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கிறார்கள் விஜய் பிரகாஷ் - சாக்ரடீஸ். இயக்குபவர் விஜய் பரமசிவம். இவர் ஒரு குறும்பட இயக்குனர்.

Ithirayil Varum Sambavangal Anaithum Karpaniye

படம் பற்றி இயக்குனர் விஜய் பரமசிவமிடம் கேட்டோம்...

"இது முழுக்க முழுக்க காமெடி படம். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சுட்டகதை, மாதிரியான பிளாக் காமெடி படம் இது. மிகப்பெரிய ஜமீன்தார் சண்முகசுந்தரம் ஒரு ரகசியத்தை சொல்லிவிட்டு இறந்து போகிறார். அதை கேட்ட சிலர் அந்த ரகசியத்தை வைத்து கோடிக்கணக்கான சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள்.

Ithirayil Varum Sambavangal Anaithum Karpaniye

அது அத்தனையும் நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கையாளப்படும் பிளாக் காமெடி யுக்தி வரும் காலங்களில் நிறைய படங்களில் பயன்படுத்தப்படலாம்," என்றார் இயக்குனர் விஜய்பரமசிவம்.

 

Post a Comment