சென்னை: தனது புதிய படங்களுக்காக லேசான தாடி மீசையுடன் சிம்பு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் பட்ட வாலு படம் ரிலீஸ் செய்யப் படாததால் மிகுந்த சோகத்தில் இருந்த சிம்பு தற்போது படங்களில் நடித்து வருவதால் சற்று நம்பிக்கையுடன் காணப் படுகிறார்.
கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படங்களும் வெளியாகாத நிலையில் விரக்தியில் இருந்த நடிகர் சிம்பு தற்போது செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் பெயரிடப் படாத புதிய படம், கெளதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படங்களில் நடித்து வரும் சிம்பு, இந்தப் படங்களுக்காக தனது லுக்கை மாற்றி உள்ளார்.
செல்வராகவன் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த நடிகை த்ரிஷா அப்படத்தில் இருந்து விலகி விட இப்போது டாப்சி, கேதரின் தெரசா என இரண்டு ஹீரோயின்களுடன் நடித்து வருகிறார் சிம்பு.
சமீபத்தில் நடந்த சந்தானம் பட ஆடியோ விழாவின்போது சிம்பு பேசுகையில் ரொம்பவே புலம்பினார் என்பது நினைவிருக்கலாம். இந்த கெளதம் மேனன் படம் வந்து அவருக்கு கை கொடுக்குமா என்பதை பார்க்க வேண்டும்.
கவலைப்படாம ஆத்தாவ வேண்டிக்க தம்பி எல்லாம் சரியாகிடும்!.!
Post a Comment