சென்னை: மிக நீண்ட வருடங்கள் கழித்து நடிக்க வந்தது போல மீண்டும் பல வருடங்கள் கழித்து சினிமா தொடர்பான விழா ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை ஜோதிகா.
கடந்த வெள்ளிகிழமை அன்று ஜோதிகா பல வருடங்கள் கழித்து மீண்டும் நாயகியாக நடித்த 36 வயதினிலே படம் வெளியானது. அதே தினம் அந்தப் படத்தின் இளம் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிறந்த நாளாகவும் அமைந்தது.
படமும், அதில் இடம் பெற்ற வாடி ராசாத்தி பாடலும் ஹிட்டாகி விட்டதால் அத்தனை பேரும் குஷியாக உள்ளனர்.
இந்த நிலையில், இரண்டு நாட்கள் கழித்து சந்தோஷ் நாராயணன் தனது பிறந்த நாள் பார்ட்டியை வைத்தார். பர்த்டே பார்ட்டிக்கு வந்த நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகாவையும் அழைத்து வந்திருந்தார். நீண்ட வருடங்கள் கழித்து ஜோதிகா கலந்து கொண்டதால் பலரும் ஆனந்த அதிர்ச்சி அடைந்து அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
Santhosh Narayanan's bday party!Follow us on twitter @DDSuryaJo @Suriyasfc
Posted by Jyothika Surya on Monday, May 18, 2015
மீண்டும் ஜோதிகா நடிக்க ஆரம்பித்து இருப்பதால் இனிமேல் விழாக்களில் அவரைக் காண முடியும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
பார்ட்டியில் எடுத்த போட்டோக்களை தனது பேஸ்புக் பக்கத்திலும் போஸ்ட் செய்து மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார் ஜோதிகா.
Post a Comment