இருவர் ஒன்றானால் பட ஜோடி நிஜத்திலும் ஒன்றானது

|

சென்னை: இருவர் ஒன்றானால் புதுமுகங்கள் நடித்து வெளிவர இருக்கும் இந்த படம் நடிகர் சூர்யாவின் மாஸ் படத்துடன் நேரடியாக மோதுகிறது.இப்போது விஷயம் அதுவல்ல படத்தில் காதலர்களாக நடித்த இந்த ஜோடி படம் முடிவதற்குள் திருமணமும் செய்து கொண்டதாம்.

நிஜ திருமணத்தை படம் பிடித்து கிளைமாக்ஸ் காட்சியில் சேர்த்து விட்டார்கள், நாயகன் பிரபு நாயகி கிருத்திகா மாலினி இருவரும் படத்தில் பல போராட்டங்களுக்குப் பின் ஒன்று சேர்வார்கள்.

Iruvaar Ondrannal hero heroine married in real life

நிஜத்திலும் இந்தஜோடி அப்படிதான் சேர்ந்திருக்கிறது பிரபுவுக்கு சொந்த ஊர் சேலம், கிருத்திகாவுக்கு மதுரை ... படிக்கும் போதே இருவரும் காதலித்து இருக்கிறார்கள். இதனைத் தெரிந்து கொண்ட இயக்குனர் படத்தில் இருவரையும் காதலிக்க விட்டு நிஜத்தில் திருமணமும்செய்து வைத்து விட்டார்.

தமிழ் சினிமாவில் இது ஒரு வித்தியாசமான முயற்சி நிஜக் காதலர்களையே படத்தில் நடிக்க வைத்ததால் படம் நன்றாக வந்து இருக்கிறது. இயக்குனர் அன்பு, தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் முருகதாசின் சீடர், அதான் வித்தியாசமா யோசிச்சு இருக்கிங்க.

கதைப்படி நாயகன் பிரபு தன்னைத் தேடி வரும் காதல்களை ஏற்றுக் கொள்ளாமல் தானே தேடிச் சென்று கிருத்திகாவை காதலிப்பாராம், நிஜத்திலும் இந்த மாதிரி செஞ்சீங்களா பிரபு?

தெரியாத ரெண்டு பேர காதலிக்க வைக்கிறத விட காதலர்களையே நடிக்க வச்ச உங்க ஐடியா சூப்பர் டேரக்டர்...

 

Post a Comment