தெகிடி, சூது கவ்வும், தி வில்லா படங்களில் நடித்த அசோக் செல்வன் அடுத்து நடிக்கும் படம் கூட்டத்தில் ஒருத்தன்.
‘இரண்டாம் பாகமான 'தி வில்லா' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார் அசோக் செல்வன். இவர் நடிப்பில் வெளியான ‘தெகிடி' பெரிய வெற்றியைப் பெற்றது.
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சவாலே சமாளி' படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ‘கூட்டத்தில் ஒருத்தன்' என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை ஞானவேல் இயக்கவிருக்கிறார். இவர் ‘பயணம்', ரத்தசரித்திரம்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவர்.
இப்படத்துக்கான பூஜை சமீபத்தில் நடந்தது. ரமணியம் டாக்கிஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.
Post a Comment