பிரபல தெலுங்கு நடிகை ரூபா தற்கொலை முயற்சி - காரணம் "கண்மணி"...!

|

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆந்திர போலீசாரால் காப்பற்றப்பட்டார்

தெலுங்கு நடிகை ரூபா கவூர் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஹூசைன் சாகர் ஏரியில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆந்திர காவல் துறையினரால் காப்பற்றப் பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்:

ஆட்டோ பாரதி அந்தஹ் புரம் , சந்திரமுகி மற்றும் சிகாரம் போன்ற டிவி சீரியல்களில் நடித்து ஆந்திர மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். தனது உறவினர் கேவல் சிங்கை காதலித்த இவர் அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்

கேவல் சிங் இவர் நடிக்கத் தடை சொல்லியதால் மனமுடைந்த இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்

மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட இவர் தற்போது பூரண நலத்துடன் உள்ளார் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Post a Comment