சென்னை: இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில், தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படத்திற்கு தொடர்ந்து தியேட்டர்களில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இரண்டு சிறுவர்களின் பீட்சா சாப்பிடும் ஆசையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட காக்கா முட்டை திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது.
கடந்த வெள்ளிகிழமை இந்தியா முழுவதும் இந்தப் படம் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் சுமார் 100 தியேட்டர்களில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் வெளியான அன்று, பல தியேட்டர்கள் அதிசயமாக ஹவுஸ்புல் காட்சிகளால் நிரம்பி வழிந்தன. பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு கூட இந்த வரவேற்பு இல்லாத நிலையில் இந்தப் படம் தொடர்ந்து நன்றாக ஓடிவருகிறது.
இதனைப் பார்த்து சந்தோசமடைந்த பல தியேட்டர் அதிபர்கள் படத்தை கூடுதல் காட்சிகளுக்கு மாற்றி உள்ளனர், மேலும் பல தியேட்டர்களில் படமானது திரையிடப்பட்டிருக்கிறது. விருது பெற்ற படங்கள் வசூலில் சோடை போய்விடும் என்ற கருத்தை காக்கா முட்டை தகர்த்து விட்டிருக்கிறது. படம் வெளியான முதல் நாளே சுமார் 1 கோடி ரூபாயை வசூலித்த இப்படம் இதுவரை 5 கோடியை வசூலித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதைப் போன்ற தரமான படங்களை மற்றவர்களும் எடுப்பதற்கு காக்கா முட்டை ஒரு வழியைக் காட்டியிருக்கிறது என்று திரையுலகைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காக்கா முட்டை - நம்பிக்கை!
Post a Comment