சென்னை: தலைப்பைப் பார்த்ததும் ஷாக் ஆகிடாதீங்க. பெரிய நடிகர்களின் படங்கள் ஒரு சில குறிப்பிட்ட பண்டிகை தினங்களில் தான் வெளியாக வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டளையால் பெரிய நடிகர்களின் படங்கள் அந்தத் தேதிகளில் மட்டுமே மோதுகின்றன.
பண்டிகை தினங்கள் அடிக்கடி வராது அல்லவா அதனால் மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே வரும் அந்த நாளில் இரண்டு நடிகர்களின் படங்கள் ஏன் சமயங்களில் மூன்று நடிகர்களின் படங்கள் கூட மோதுகின்றன.
அந்த மோதலில் லேட்டஸ்ட் ஆக இணைந்து இருக்கின்றனர் நடிகர் ஆர்யாவும், விக்ரமும். ஆகஸ்ட் 15 அன்று வரும் சுதந்திர தினத்தன்று இருவரின் படங்களும் தியேட்டர்களில் வெளியாகின்றன. புறம்போக்கு என்னும் பொதுவுடமையைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க. ஐ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் பத்து எண்றதுக்குள்ள.
இந்த இரண்டு படங்களும் சுதந்திர தினத்தன்று மோதவிருப்பதால் எந்தப் படம் வெற்றிபெறும் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருவரின் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னாவின் நடிப்பில் விஎஸ்ஓபி படம் காமெடி கலந்து படமாக்கப்பட்டுள்ளது. கோலிசோடா படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம்- சமந்தா நடிப்பில் பத்து எண்றதுக்குள்ள படம் தயாராகி உள்ளது.
ஆர்யாவின் படத்தில் என்னதான் காமெடி தூக்கலாக இருந்தாலும், விக்ரமின் மிரட்டல் நடிப்பிற்கு முன் அதெல்லாம் ஒன்றுமில்லை, என்று ரசிகன் எண்ணிவிடும் அபாயமும் படத்திற்கு உள்ளது. சுதந்திர தினத்தன்று தெரிந்து விடும் யாருக்கு உண்மையான சுதந்திரம் சாரி வெற்றி என்று பார்க்கலாம்.
Post a Comment