ட்விட்டரில் மோசடி.. கமிஷனர் அலுவலகத்தில் இயக்குநர் ஹரி புகார்!

|

தனது பெயரைப் பயன்படுத்தி ட்விட்டரிலே மோசடி நடந்திருப்பதாக இயக்குநர் ஹரி சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

தனது உதவி இயக்குநர் மூலம் ஹரி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த அந்தப் புகார் மனு:

Directot Hari lodges complaint againt fake twitter ID

சாமி, சிங்கம் உள்ளிட்ட நிறைய தமிழ் படங்களை நான் இயக்கி உள்ளேன். ட்விட்டர் இணையதளத்தில் எனது பெயரில் போலி பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அவதூறான தகவல்கள் எனது பெயரில் பரப்பப்படுகிறது.

இது தனிப்பட்ட முறையில் எனக்கும், எனது சினிமா இயக்குநர் தொழிலுக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. போலி இணையதள முகவரியை முடக்கி, இதை எனது பெயரில் தொடங்கியவர் யார் என்று கண்டுபிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் உடனடி நடவடிக்கையை தொடங்கினார்கள். உடனடியாக ஹரி பெயரில் டுவிட்டரில் உள்ள போலி இணையதள முகவரி முடக்கப்பட்டது. அதை தொடங்கியவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

 

Post a Comment