சென்னை: ஊதா கலரு ரிப்பன் என்ற ஒரே பாடலின் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பரவலாக அறியப்பட்ட நடிகை ஸ்ரீதிவ்யாவைத் தொடர்ந்து அவரது அக்காவும் நடிகையாகியுள்ளார்.
தொடர்ந்து தாவணி பாவாடையிலேயே நடிக்க இளைஞர்கள் ஸ்ரீதிவ்யாவைத் தங்கள் கனவுக் கன்னியாக ஏற்றுக் கொண்டனர்.
தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கு போட்டியாக அவரது வீட்டில் இருந்தே சத்தமில்லாமல், இன்னொரு நடிகை உருவாகி விட்டார் அவருக்கு தங்கை கிடையாதே என்று நினைக்காதீர்கள்.
அக்கா இருக்கிறார் என்னது அக்காவா ன்னு ஜெர்க் ஆகாதீங்கப்பா, அக்காதான் நடிக்க வரப்போகிறார். அவரின் பெயர் ஸ்ரீரம்யா. இவரின் முதல் படம் 1940லோ ஒக கிராமம் என்ற தெலுங்குப் படம். இதில் நடித்தற்காக நந்தி விருது பெற்றிருக்கிறார்.
தமிழில் யமுனா என்ற படத்திலும் நடித்திருக்கிறார், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீரம்யா தங்கை ஸ்ரீதிவ்யாவை ஒருபோதும் போட்டியாக நினைத்தது இல்லையாம் (பாசம்).
சக்கரவாக்கம் என்ற தெலுங்கு சீரியலில் இருவரும் பாசமான அக்கா, தங்கையாக நடித்திருக்கிறோம் என்று கூறும் ஸ்ரீரம்யா இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்றால் தங்கை ஸ்ரீதிவ்யாவுடன் சேர்ந்து நடிப்பதற்கும் தயாராக இருக்கிறாராம் (நல்லது).
Post a Comment