விரக்தி, மனஅழுத்தம், கவலை, பலவீனம், தனிமை சோர்வு என இன்றைக்கு பலருக்கும் உளவியல் சார்ந்த பல பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு அளிக்கும் விதமாக "இனியவளேஉனக்காக" என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது சத்தியம் தொலைக்காட்சி.
உளவியல் ரீதியான பல பிரச்சினைகள் உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. இந்த பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. எனவே சத்தியம் தொலைக்காட்சியில் உளவியல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு தொலைப்பேசி உரையாடலில் தெளிவான தீர்வும், முழுமையான ஆலோசனையும் தருகிறார் டெய்சி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் மற்றும் குடும்பநல ஆலோசகருமான திருமதி.டெய்சிசரண்.
இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிப்பரப்பினை வாரந்தோறும் புதன்கிழமை இரவு 8.30 மணிக்கும் இதனுடைய மறு ஒளிபரப்பினை வாரந்தோறும் திங்கள் காலை 11 மணி முதல் 12 மணி வரை சத்தியம் தொலைக்காட்சியில் காணலாம்.
Post a Comment