கோடம்பாக்கமே பேயாக மாறிக் கொண்டிருக்கிறது. முன்னணி ஹீரோக்களுக்கும் பேய் பிடித்துவிட்டது. இதில் நயன்தாரா மட்டும் சும்மா இருப்பாரா?
அவரும் ரசிகர்ளைப் பேயாக ஆட்டிப் படைக்கத் தயாராகிவிட்டார். அவர் நடித்த புதிய படமான மாயா விரைவில் வெளிவர இருக்கிறது.
ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கும் நயன்தாரா, பேய் பிடித்த பெண்ணாக மாறி ரசிகர்களை கலங்கடிக்கப் போகிறாராம்.
மாயா படத்தை எஸ்ஆர் பிரபு தயாரிக்க, அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் குறும்படங்கள் சிலவற்றை இயக்கியுள்ளார். நெடுஞ்சாலையில் நடித்த ஆரி இதில் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்.
பிப்ரவரியிலேயே ஷூட்டிங் முடிந்துவிட்ட, இந்தப் படம் மே மாதத்திலேயே வெளியாகவிருந்தது. சூர்யா - நயன்தாரா நடித்த மாஸ் பட வெளியீட்டுக்காக காத்திருந்தனர். விரைவில் வெளியாகவிருக்கிறது மாயா.
Post a Comment