சென்னை: ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிப்பில் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றது. 2010 ம் ஆண்டில் இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.
இந்தப் படத்திற்குப் பின்னர் 5 வருடங்கள் கழித்து வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கின்றனர் ஆர்யா சந்தானம் மற்றும் இயக்குநர் ராஜேஷ் இம்மூவரும்.
ஆர்யா ஜோடியாக முதல் முறையாக தமன்னா இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தை சொந்தமாகத் தயாரிக்கிறார் நடிகர் ஆர்யா. ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைத் தயாரித்த ஆர்யா, அழகுராஜா படத்தின் தோல்வியில் இருந்து இயக்குநர் ராஜேசைக் கைதூக்கி விட எண்ணி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் தனக்கு ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்ததற்கு, நன்றி காட்டும் விதமாக இந்த உதவிகளை இயக்குநர் ராஜேஷுக்கு செய்து கொடுத்திருக்கிறார் ஆர்யா.
படம் தற்போது இறுதிக் கட்ட வேலைகளில் இருக்கின்றது,விரைவில் பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளனர் விஎஸ்ஓபி படக்குழுவினர்.
Post a Comment