"பாகுபலியை ரஜினிக்கு ஏன் முதலில் போட்டுக் காட்டணும்னு ஆசைப்படறோம் தெரியுமா?"

|

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளம்.. அதனால்தான் எங்கள் பாகுபலி படத்தை அவருக்கு முதலில் திரையிட்டு மரியாதை செய்ய விரும்புகிறோம், என்று நடிகை அனுஷ்கா கூறினார்.

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி படத்தின் முதல் பாகம் வரும் ஜூலை 10-ம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகிறது.

Rajinikanth is the epitome of Indian Cinema, says Anushka

இந்தப் படம்தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற அறிவிப்போடு வெளியாகிறது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.

இந்தியா சினிமா மட்டுமின்றி, உலகமே பெரும் ஆர்வத்துடன் இன்றைக்கு எதிர்நோக்கும் படமாக பாகுபலி மாறிவிட்டது.

படத்தின் ட்ரைலர் வெளியீட்டின்போது, இந்தப் படத்தை முதலில் யாருக்கு திரையிட்டுக் காட்ட விரும்புகிறீர்கள் என்று நடிகை அனுஷ்காவிடமும், நாயகன் பிரபாஸிடமும் கேட்டபோது, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குதான் முதலில் திரையிட்டுக் காட்ட விரும்புகிறோம்," என்று கூறினர்.

'ஏன் ரஜினிக்குதான் படத்தை முதலில் காட்ட வேண்டும் என விரும்புகிறீர்கள்.. சிறப்புக் காரணம் உண்டா?' என்று கேட்டதற்கு அனுஷ்கா சொன்ன விளக்கம் இது:

"ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் பெருமைக்குரியவர். இந்திய சினிமாவுக்கான சந்தையை உலக அளவில் பெரிதாக்கித் தந்தவர்.

அவரை நமது சினிமாவின் அடையாளமாகப் பார்க்கிறோம். இந்தப் படத்தை அவருக்கு முதலில் திரையிட்டுக் காட்டி மரியாதை செய்ய விரும்புகிறோம்," என்றார்.

 

Post a Comment