பாம்பென்றால் படையும் நடுங்கும்.. ஒரு சினிமா ஹீரோயின் எம்மாத்திரம்? ஆனால் இந்த வழக்குச் சொல்லை உடைத்தெறிந்திருக்கிறார் ஒரு நாயகி. அவர்தான் காவல் பட தயாரிப்பாளர் கம் ஹீரோயின் கீதா. ஆங்.. புன்னகைப்பூ கீதா.
அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களைத் தயாரித்த பின் கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்த கீதா, இப்போது நாகேந்திரன் இயக்கத்தில் காவல் என்ற படத்தை தயாரித்து, நாயகியாகவும் நடிக்கிறார்.
நாளை படம் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை கீதா சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
அதில் ஒன்றுதான் இந்த பாம்பு சமாச்சாரம். காவல் படத்திற்காக கேரளாவில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்தப் பக்கம் வந்துவிட்ட ஒரு நல்ல பாம்பை ஒன்றை அவர் சர்வசாதாரணமாக பிடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
படமெடுத்து ஆடிய அந்தப் பாம்பைப் பார்த்து, "படம் பிடிப்பவருக்கு உன் படத்தைக் காட்டு' என்று கூறி போஸ் கொடுக்க வைத்தாராம்!
Post a Comment