ஹாலிவுட் படமான கிளாடியேட்டர் போல ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக உருவாகியுள்ளது விஜய்யின் புலி என்கிறார் அதன் தயாரிப்பாளர்கள் ஷிபு தமீம் மற்றும் பிடி செல்வகுமார்.
விஜய்யின் புலி ஒரு அதியுச்ச கற்பனைப் படம் (பேன்டஸி) என்று கூறப்பட்டு வந்தது. அந்த அதியுச்ச கற்பனை எப்படி இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர்கள் பிடி செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் ஒரு அறிக்கை மூலம் கூறியுள்ளனர்.
அந்த அறிக்கை:
ரஸ்ஸல் குரோவ் நடித்த தி கிளேடியேட்டர் ஹாலிவுட் திரைப்படத்தைப் போன்ற ஆக்சன் அட்வென்ச்சர் படமாக புலி இருக்கும்.
விஜய்யின் கேரியரில் இந்தப் படம் முக்கியமானதாக அமையும்.
தென்னிந்திய மக்கள் ஒவ்வொருவரும் ஸ்ரீதேவி தமிழில் மீண்டும் நடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர் உண்மையில் இங்கு பிரபலமிக்கவர். அவரை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் அணுகியிருப்பர். ஆனால், புலி படத்தின் திரைக்கதையினை கேட்டு அதில் நடிக்க அவர் ஒப்பு கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிக பலம் மற்றும் அதிகாரங்கள் கொண்ட ஒரு குழுவின் தலைவியாக ஸ்ரீதேவி இதில் நடிக்கிறார்," என்று தெரிவித்துள்ளனர்.
Post a Comment