பிரபல நடிகை ஆர்த்தி அகர்வால் திடீர் மரணம்

|

‘பம்பரக் கண்ணாலே' படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான ஆர்த்தி அகர்வால் (31) அமெரிக்காவில் திடீர் மரணம் அடைந்தார்.

1984-ல் பிறந்த ஆர்த்தி அகர்வால் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் பிறந்தவர் ஆர்த்தி அகர்வால். 2001-ல் பாகல்பன் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். அடுத்து வெங்கடேஷ் ஜோடியாக நுவ்வு நாக்கு நச்சவ் என்ற படத்தில் நடித்தார்.

Actress Aarthi Agarwal passes away

இதன் மூலம் அவர் தெலுங்கில் பிரபல நடிகையானார்.

தமிழில் பம்பரக் கண்ணாலே படத்தின் மூலம் 2005-ல் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்து வந்தார். 2009-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கே திரும்பினார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தவர், சமீபத்தில்தான் ரணம் 2 என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார்.

உடல் நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவருக்கு ஆஸ்த்மா கோளாறு என்பதால் மரணமடைந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம், லைப்போசக்ஷன் எனும் கொழுப்பு நீக்க அறுவைசிகிச்சை செய்ததன் காரணமாகவே, மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டு அவர் இறந்ததாகவும் கூறுகிறார்கள்.

ஆர்த்தி அகர்வாலின் மரணம், தெலுங்கு திரையுலகை அதிர வைத்துள்ளது.

 

Post a Comment