மும்பை: இன்று திரைக்கு வந்திருக்கும் மிஸ் தனக்பூர் ஹாசிர் கோ படத்தைப் பற்றி பரவலான விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பதிவிடப் பட்டுள்ளன.
வட மாநிலங்களில் நடைபெறும் பஞ்சாயத்துக்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப் பட்டிருக்கிறது, சில நாட்களுக்கு முன்னர் கூட இந்தப் படத்தின் இயக்குநர் வினோத் கப்ரி தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 51 எருமை மாடுகள் பரிசாகத் தரப்படும் என்று "காப்" என்று அழைக்கப் படும் பஞ்சாயத்து அமைப்புகள் கூறியது.
ஏனெனில் இவர்களின் அடாவடிகளை மையமாகக் கொண்டு அரசியல் நையாண்டியாகத் தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எருமை மாட்டை பலாத்காரம் செய்து விட்டதாக இளைஞன் ஒருவன் தண்டிக்கப்படுவதும் அதைத் தொடர்ந்த காட்சிகளும் தான் படத்தின் கதையாம் ( முடியல)
ஓம் புரி, அணில் கபூர், ரவி கிஷான், ராகுல் பாகா மற்றும் ஹ்ரிஷிதா பட் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சில இடங்களில் இந்தப் படத்திற்கு தடைகளும் விதிக்கப்பட்டு உள்ளது.
சமூக ஊடகங்களில் படம் நன்றாக இருக்கிறது என்று ஒருசிலரும் ,படத்தைப் பார்த்து பணத்தை இழக்காதீர்கள் என்று வேறு சிலரும் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
பெரும்பாலான ஊடகங்களின் விமர்சனங்களும் படத்திற்கு எதிராகவே இருக்கிறது, இதன் தாக்கம் வசூலில் எதிரொலிக்கிறதா என்று பார்க்கலாம்.
Post a Comment