ஒரே நாளில் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' மற்றும் 'குற்றம் கடிதல்'!

|

தனது குற்றம் கடிதல் மற்றும் நாலு போலீசும் நல்லாருந்த ஊரும் ஆகிய படங்களை ஒரே நாளில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார் ஜே சதீஷ்குமார்.

ஜேஎஸ்கே நிறுவனம் தயாரித்து 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' நகைச்சுவை படம். குற்றம் கடிதல் படம் ஏகப்பட்ட சர்வதேச விருதுகள் மற்றும் தேசிய விருதினைப் பெற்றுள்ளது.

இந்த இரு படங்களையுமே ஜூன் 19ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

J Sathish Kumar to release 2 movies simultaneously

இந்த இரு படங்களின் மீதும் தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாலேயே, ஒரே நாளில் வெளியிடுவதாகக் கூறுகிறார் ஜே சதீஷ்குமார்.

"ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் தயாரிப்பாளர் JSK சதீஷ் குமாரின் இந்த முடிவு இவ்விரண்டு படங்களின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. " இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு பாணிகளை NJ ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' ஒரு புதிதான கதைக்களத்தில் அமைந்த நகைச்சுவை திரைப்படம்.

என்ஜே கிருஷ்ணா இயக்கியுள்ள நாலு போலீசும் நல்லாருந்த ஊரும் படத்தில் நான்கு போலிஸ்காரர்கள் தங்கள் வேலையை தக்க வைக்க செய்யும் பல தந்திரங்களை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார்களாம்.

குற்றம் கடிதல் விருது படம் மட்டுமல்ல, விறுவிறுப்பான பொழுதுபோக்கும் படமும் கூட என்கிறார் அந்தப் படத்தின் இயக்குநர்.

 

Post a Comment