சென்னை: ஒரு ஆண்டில் இனி இரண்டு படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம் சூர்யா.
பெரிய நடிகரின் மகன் என்ற பெயருடன் திரை உலகில் நுழைந்த சூர்யா தனது கடின உழைப்பால் தனக்கென்று ஒரு பெயரை எடுத்துள்ளார். சூர்யாவா, படத்தை ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்று பெயர் எடுத்துள்ளார். கதாபாத்திரத்திற்கு ஏற்றது போன்று உடல் எடையை கூட்டி குறைப்பதிலும் வல்லவர் சூர்யா.
ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டும் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளார் சூர்யா. அவ்வாறு ஒரு படத்தில் நடிப்பதால் அந்த படம் ஓடவில்லை எனில் அந்த ஆண்டு தோல்வியான ஆண்டாகிவிடுகிறது. இதனால் இனி ஆண்டுக்கு இரண்டு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சூர்யா. ஒரு படம் மாஸாகவும் மற்றொன்று ஹைக்கூ போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப் போகிறாராம்.
மாஸுக்கு மாஸும் ஆச்சு, கிளாஸுக்கு கிளாஸும் ஆச்சு என்று பார்க்கிறார் சூர்யா. இதுதவிர தனது காதல் மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது என்றும் முடிவு செய்துள்ளாராம்.
சூர்யா தற்போது 24 படத்தில் தாத்தா, மகன், பேரன் என்று மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment