சிம்பு நடித்த வாலு இப்போ ரிலீஸ்.. அப்போ ரிலீஸ் என அவ்வப்போது அறிவிப்புகள் வருவதும், பின்னர் அப்படியே சைலன்டாகிவிடுவதும் வழக்கமான சமாச்சாரமாகிவிட்டது.
விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூலை 17-ந் தேதி வெளியாகவிருப்பதாக கடைசியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'வாலு' படத்தின் படப்பிடிப்பின்போதுதான் சிம்புவும் ஹன்சிகாவும் காதல் வயப்பட்டனர். அதன்பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர்.
படம் முடிந்து விட்டதாகக் கூறப்பட்டாலும், இன்னும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டியுள்ளது. இப்போது அந்தப் பாடலையும் ஷூட் செய்து இணைக்கப் போகிறார்களாம். இதில் கலந்து கொள்ள ஹன்சிகா வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஹன்சிகாவோ நிச்சயம் வந்து நடித்துத் தருகிறேன் என உறுதி அளித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, வாலு பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வரத் தயாராக உள்ளாராம்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "வாலு' படம் ஜூலை 17-ந் தேதி வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படம் வெளியாவதற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் எனக்கு நன்றாக தெரியும். என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு. படம் வேறு. இந்த படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவினர் எப்போது என்னை அழைத்தாலும், அதற்காக நான் என்னுடைய நேரத்தை ஒதுக்க தயாராக உள்ளேன். ஏனென்றால், இதுவும் என்னுடைய படம்தான்," என்றார்.
Post a Comment