சென்னை: நயனதாரா வழியில் சமந்தாவும், தனது முன்னாள் காதலருடன் இணைகிறார் - படத்துக்காக.
நடிகர் சிம்புவை உருகி உருகிக் காதலித்துப் பிரிந்த நடிகை நயன்தாரா, அதற்குப் பின் அவரிடம் எந்தத் தொடர்பும் இல்லாமலேயே பார்த்துக் கொண்டார். இடையில் சிலபல காரணங்களால் சில வருடங்கள் இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்த நயனிடம், சிம்புவுடன் ஜோடியாக நடிக்க முடியுமா என்று தூண்டிலை வீசினார் இயக்குநர் பாண்டிராஜ்.
பழைய கதைகளை கிண்டிக் கிளறாமல் கேட்ட பணத்தை கொடுங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறிய நயன், தொடர்ந்து அதே போன்று கால்ஷீட் எதுவும் சொதப்பாமல் சொன்னபடி நடித்துக் கொடுத்தார்.
தற்போது இதே வழியில் செல்கிறார் நடிகை சமந்தா, நடிகர் சித்தார்த்துடன் பல வருடங்களாக தொடர்ந்த காதல் தற்போது முடிவுக்கு வந்து விட்டது.
இதனால் மன வருத்தத்தில் இருந்த சமந்தா அது எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் தற்போது நடிகர் சித்தார்த்துடன் அரண்மனை பார்ட் 2 வில் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். நிஜ வாழ்க்கை வேறு நடிப்பு வேறு என்பதைத் தற்போதைய நடிகைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றனர்.
ஒரு செடியில ஒரு பூ மட்டும் தான் பூக்கனுமா என்ன?
Post a Comment