சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என சங்கத்தின் பொருளாளர் வாகை சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தல் தொடர்பாக தற்போது சங்க பொருளாளராக இருந்து வரும் வாகை சந்திரசேகர் ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:‘
‘ஒவ்வொரு நடிகருக்கும் நடிகர் சங்கம் தாய் வீடு. அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. நடிகருக்கு அரசியல் என்பது அவருடைய சுதந்திரம். நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் அரசின் ஆதரவு தேவை. அரசிடம் தங்கள் தேவைகளை கேட்க உரிமை உண்டு. ஆனால், அமைப்புக்குள் அரசியலை நுழைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
சங்கத்தின் தலைவரான சரத்குமார், ஜெயலலிதாவின் அரசியலை புகழ்ந்து தள்ளினார். துதி பாடினார். அதோடு நிற்கவில்லை. சட்டப் பேரவையிலும், பொதுக் கூட்டங்களிலும் கருணாநிதியைத் தாக்கிப் பேசினார்.
நான் கருணாநிதியிடம் வைத்திருக்கும் அன்பு, பாசம், விசுவாசம் இவற்றை சீண்டிப் பார்க்கும் எவரோடும் என் பயணம் இருக்காது. எனவே நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.''
இவ்வாறு அந்த அறிக்கையில் வாகை சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
Post a Comment