மேகி நூடுல்சில் நடித்த அத்தனை பேர் மீது எப்.ஐ.ஆர் போடுங்க... பீகார் கோர்ட் அதிரடி

|

மும்பை: நெஸ்லேநிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அத்தனை பேர் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய பீகார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட உப்பு மற்றும் ரசாயனம் அதிகமாக இருந்ததைக் கண்டுபிடித்த உத்திரப் பிரதேச அரசு அந்த நூடுல்சைத் தடை செய்ய சொல்லியதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் நெஸ்லே நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது.

Bihar court orders FIR against Amitabh Bachchan, Madhuri Dixit and Preity Zinta for endorsing Maggi

மேலும் அந்த நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன் நடிகைகள் மாதுரி தீக்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா மீது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி என்ற இடத்தில வழக்குப்பதிவு செய்யப் பட்டது. மூவர் மீதும் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் கோர்ட்டிலும் நூடுல்சைத் தடை செய்யக் கோரி வழக்குத் தொடரப்பட்டது.

இன்று காலை கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் மேகி நூடுல்சில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன் நடிகைகள் மாதுரி தீட்சித் , பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ்லே அதிகாரிகள் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சொல்லி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 

Post a Comment