வரலாற்று சிறப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ‘கிரந்தி யாத்ரா’

|

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "கிரந்தி யாத்ரா" வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Sankara TV new program Kranthi Yathra

யாத்ரா என்றால் நம் மனதில் நினைவுக்கு வருவது தீர்த்த யாத்ரா தான் பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் தீர்த்தயாத்திரையை நிகழ்சிகளாக வழங்குவர்கள். ஆனால் கிரந்தி யாத்ரா ஒரு தனித்துவமான நிகழ்ச்சி ஆகும். ஆங்கிலேய ஆட்சியில் சுதந்திர இந்தியா என்பது கனவாகவே இருந்தது. சுதந்திர இந்தியாவிற்கு முன் தென் இந்தியவில் சில பகுதிகள் சுதந்திரத்திற்காக முக்கிய பங்காற்றினார்.

Sankara TV new program Kranthi Yathra

தென்னிந்தியாவில் சுதந்திர போராட்டமானது எழுச்சியுடன் துவக்கப்பட்டது. அப்படிப்பட்ட இடங்களின் வரலாறு மிகவும் சிறப்பானது, இன்றும் அது பலருக்கு சுதந்திர வேட்கையை துண்டும் வண்ணம் அமைகிறது.

Sankara TV new program Kranthi Yathra

அந்த வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்குச்சென்று தியாகிகளின் வரலாற்றை தோண்டியெடுப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். கிரந்தி யாத்ரா நிகழ்ச்சியின் மூலம் சுதந்திர போராட்டம் பற்றி வெளிவராத உண்மைகளை வாசகர்களுக்கு தெரிவிப்பதே நோக்கமாகும். சக்கரவர்த்தி சுளிபெலே அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி ஒவ்வொருவாரமும் சனிக்கிழமையன்று ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.

 

Post a Comment