கமலின் பாபநாசம் படத்தால் அருள்நிதி படத்துக்கு வந்த சிக்கல்!

|

கமலின் பாபநாசம் படம் ஜூலை 3-ம் தேதி வெளியாவதால், பிற படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்று வெளியாகவிருந்த அருள்நிதி நடித்த நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் தள்ளிப் போய்விட்டது.

அறிமுக இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

Papanasam postpones Arulnidhi movie to July 31st

வருகிற ஜூலை 3-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபநாசம்' படம் ஜூலை 3-ந் தேதி வெளியிடுவதாக திடீரென அறிவித்தனர். அன்றைய தினத்தில் விவேக் நாயகனாக நடித்த பாலக்காட்டு மாதவன் உள்ளிட்ட மேலும் சில படங்களும் வெளிவருகின்றன.

இதனால், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' படத்தின் ரீலீஸ் தேதியை இப்படத்தை வெளியிடும் ஜே.எஸ்.கே நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து ஜே.எஸ்.கே நிறுவனத்தின் நிர்வாகி சதீஷ்குமார் கூறும்போது, எங்கள் நிறுவனம் சார்பாக ஜூலை 3-ம் தேதி வெளியாக இருந்த ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' திரைப்படம் தற்போது கமல் நடித்த ‘‘பாபநாசம்' திரைப்படம் அதே தேதியில் வெளியாவதால், எங்களது விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜூலை 31-ந் தேதி படத்தை வெளியிடப் போகிறோம், தெரிவித்துள்ளார்.

 

Post a Comment