நானும் ரவுடிதான்

|

சென்னை: தனுஷ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வந்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது பலருக்கும் உள்ள கேள்வி.

‘Naanum Rowdy Dhaan’ shooting completed

காரணம் ரொம்ப சிம்பிள்... நயன்தாரா!

அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அந்தப் படம் அதிக கவனம் பெற்றுவிடும். அதுவும் சாதாரண படத்தில் ஒப்பந்தமாகிறார் என்றால் கூடுதல் கவனம் கிடைக்கும்.

ராஜா ராணி படம் நினைவிருக்கிறதா.. ஒரு புதுமுக இயக்குநரின் படம் அது. ஆர்யா ஹீரோ என்பதைத் தவிர எந்த முக்கியத்துவமும் இல்லாத அந்தப் படத்துக்கு, நயன்தாராதான் முக்கிய பப்ளிசிட்டியாக அமைந்தார். ஆர்யாவுடன் காதல், கல்யாணம் என இயக்குநரே கதை கட்டி செய்தி அனுப்ப, அனைத்தையும் அனுமதித்தார் நயன்.

இதுதான் நானும் ரவுடிதான் படத்திலும் நடந்தது. நயன்தாராவுக்கும் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக எழுந்த வதந்திகளே படத்துக்கு இலவச விளம்பரமாக அமைந்தது.

படப்பிடிப்பின் கடைசி நாளன்று இயக்குநர் விக்னேஷைக் கட்டிப்பிடித்தபடி போஸ்கொடுத்து நயன்தாரா எடுத்து வெளியிட்ட படங்கள் இன்னும் பரபரப்பைக் கிளப்பின.

ஆரம்பத்தில் நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பதைத் தவிர வேறு எதுவும் மீடியாக்களின் கவனத்தைக் கவரவில்லை. ஆனால் விக்னேஷும், நயனும் காதலிக்கிறார்கள் என்று எழுந்த செய்தியால் நாள்தோறும் செய்திகளில் படத்தின் ஏதாவது ஒரு செய்தி வெளியானது. இது உண்மையில் திட்டமிட்டு செய்த செயலா அல்லது படத்திற்கான விளம்பரமா என்பது தெரியவில்லை.

பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் தொடர்ந்து நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்ததும், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனுஷுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார். தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் சார்பாக படத்தைத் தயாரித்துள்ளார். படத்தில் ராதிகா, பார்த்திபன் மற்றும் ஆர்.ஜெ.பாலாஜி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

காதல் மற்றும் காமெடியை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ள இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படப்பிடிப்புக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஆங்.. படத்துல ஹீரோ விஜய் சேதுபதிங்க. நயன் கிளப்பிய விளம்பரப் புயலில் பாவம் அவரு காணாம போயிட்டாரு!

 

Post a Comment