ஷங்கரை நான் மிஞ்சிவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது! - ராஜமவுலியின் தன்னடக்கம்

|

ஷங்கரை நான் மிஞ்சிவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது என இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று கூறப்படும் சங்கரை மிஞ்சி விட்டதாக என்னைப் பாராட்டுகிறார்கள்.

இதை ஏற்க முடியாது. ஷங்கர் புதிய தொழில்நுட்பத்தில் படத்தை இயக்கும்போது, எனக்கு கிரீன் மேட் என்னும் தொழில்நுட்பம் கூட அறியாமல் இருந்தேன்.

Rajamouli rejects comparison with Shankar

அவரிடம் என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். ஷங்கருக்கு அடுத்து ராஜமௌலி என்று சொன்னால் கூட அந்தளவிற்கு உயர்ந்து விட்டேன் என்று சந்தோஷப்படுவேனே தவிர, ராஜமௌலிக்கு அடுத்துதான் ஷங்கர் என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஷங்கர்தான் எனக்கு முன்னோடி," என்றார்.

சர்வதேச அளவில் தன் பாகுபலிக்கு பாராட்டுகள் குவிவது மகிழ்ச்சியளிப்பதாகவும், படமும் அந்த அளவுக்கு இருக்கும் என்றும் கூறினார் ராஜமவுலி.

 

Post a Comment