சேரன் நடித்த அப்பாவின் மீசை படத்துக்கு சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ரவிபிரசாத் பிலிம்ஸ் லேப்ஸ் நிறுவனம் என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், "தாமினி சினியோகிராபி நிறுவனம் சார்பில் ‘அப்பாவின் மீசை' என்ற தலைப்பில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சேரன், நடிகை நித்யா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு தயாரிப்பு செலவுக்காக கடந்த 2012-ம் ஆண்டு ரூ 25 லட்சத்தை என்னிடம், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நிவேதா பிரியதர்ஷினி கடனாக வாங்கினார். அப்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பணத்தை திருப்பிக் கொடுக்கவேண்டும். அந்த படத்தின் காப்புரிமை எனக்கு வழங்க வேண்டும்.
ஆனால், தற்போது இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை பெற்றுள்ளனர். இந்த படத்தின் காப்புரிமை என்னிடம்தான் உள்ளது. எனவே, எனக்கு தரவேண்டிய பணத்தை திருப்பித்தரும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு 6-வது உதவி பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 29-ந்தேதி வரை ‘அப்பாவின் மீசை' படத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
Post a Comment