சென்னை: எல்லாம் ஓ காதல் கண்மணி ஹிட்டான தைரியம் தான் பொண்ண இப்படி பேச வைக்குது.. அப்படி என்ன பேசினாங்க.. யார் பேசினாங்கன்னு கேட்கறீங்களா..
நடிகை நித்யாமேனன்தான் இப்படிப் பேசி இருக்காங்க.
'கல்யாணம் செய்யாம சேர்ந்து வாழுறது தப்பு இல்ல', அப்படின்னு நித்யா சொல்லியிருக்காங்க. ஏற்கனவே ஓ காதல் கண்மணி படம் வந்ததுல இருந்து வயசுப்ப சங்க, பொண்ணுங்க இருக்கற வீட்டில பெத்தவங்க மனசு திக்குதிக்குன்னு அடிச்சிட்டு இருக்கு.
நம்ம பசங்களும் இப்படி எல்லாம் இருப்பாங்களோன்னு பெத்தவங்க பதறிட்டு இருக்கறப்ப, எரியற நெருப்புல கொஞ்சம் எண்ணெய் ஊத்துனமாதிரி நித்யாமேனன் இப்படிப் பேசி அவங்களோட கருத்துச் சுதந்திரத்த ஊருக்குள்ள விதைச்சி இருக்காங்க. காலத்திற்கு ஏற்றவாறு இயக்குநர் மணிரத்தினம் ஓ காதல் கண்மணியில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளைப் பற்றி எடுத்து இருந்தார்.
இளம்ஜோடிகளாக நடிகர் துல்கரும் நடிகை நித்யாமேனனும் மிகவும் நெருக்கமாக நடித்து இருந்த இந்தப்படம் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் ஒருசேரக் குவித்தது. அதில் நடித்த நித்யாமேனன், 'திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழுவது தவறல்ல, காலத்திற்கு ஏற்றவாறு பெற்றோரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். திருமணம் செய்து கொள்வதால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிய நேரலாம், ஆனால் சேர்ந்து வாழும் முறையில் இந்த தவறுகளைத் தவிர்த்திட இயலும். இந்த மாதிரி சேர்ந்து வாழும் போது குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது' என்று கருத்துக் கூறியுள்ளார்.
என்னம்மா இப்படிப் பேசிட்டிங்களேமா..!
Post a Comment