நம்பர் ஒன் இடத்திற்கு வேகமாக முன்னேறுகிறார் சுருதி

|

சென்னை: தமிழ்த் திரையுலகில் நம்பர் 1 இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார் நடிகை சுருதிஹாசன். ஆமாம் இந்த 2015 ம் ஆண்டு சுருதிக்கு மிகவும் அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமைந்திருக்கிறது.

சமீபத்தில் மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கி இருந்தார் சுருதிஹாசன், கார் வாங்கிய ராசியோ என்னவோ தொடர்ந்து ஏறுமுகத்துடன் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் சுருதி.

Shruti No 1 Heroine In Kollywood?

சுருதி இந்தியில் நடித்த கப்பார் இஸ் பேக் திரைப்படம் இந்தியில் நன்றாக ஓடி வசூல் சாதனை படைத்தது, தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் நடித்த ரேஸ் குர்ரம் படம் நன்றாக ஓடியது. அதுமட்டுமின்றி ரேஸ் குர்ரம் படத்தில் நடித்ததற்காக 62 வது தென்னிந்திய பிலிம்பேர் விருதில் இந்த ஆண்டின் சிறந்த கதாநாயகி என்ற விருதையும் பெற்றார்.

இப்போது தமிழிலும் கைநிறைய படங்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சுருதிஹாசன். புலி படத்தில் விஜயுடன் நடித்து முடித்திருக்கும் சுருதிக்கு அடுத்தடுத்து அஜீத்தின் புதிய படம் மற்றும் நடிகர் சூர்யாவின் புதிய படம் என்று வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டுகின்றன.

இதனால் தமிழில் வேகமாக நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் நடிகை சுருதிஹாசன்.

 

Post a Comment