யாமிருக்க பயமே என்ற அசத்தலான வெற்றிப் படத்தைக் கொடுத்த டிகே அடுத்து இயக்கும் படம் கவலை வேண்டாம். இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக நடிக்க, எல்ரெட் குமாரின் ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிக்கிறது.
ஜீவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இந்தப் படம் குறித்து இயக்குனர் டிகேவிடம் பேசினோம்: "அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்துள்ள இப்படத்தில் ஜீவா, கீர்த்தி சுரேஷ் மிகவும் தேர்ந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த கதாநாயகி தேவைப்பட்டார்.
ஆனால் கீர்த்தி இந்த கதாப்பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தினார். ரசிகர்களுக்கு கூடுதல் சுவாரஸ்யமாக பாபிசிம்ஹா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அடுத்த மாதம் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம்," என்றார்.
ஜீவா இப்போது திருநாள் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கவலை வேண்டாம் ஆரம்பமாகிறது.
Post a Comment