சண்டை போடாதீர்கள் – ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட சல்மான்!

|

மும்பை: சர்ச்சைகளுக்கு மட்டுமே சொந்தக் காரரான சல்மான் திடீரென்று எடுத்த ஒரு நடவடிக்கை காரணமாக, இந்தித் திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இனிமேல் சண்டையிடக் கூடாது என்று அன்புக் கட்டளையை தனது ரசிகர்களுக்கு இட்டுள்ளார்.

நான் ஷாரூக் மற்றும் அமீரை எனது நண்பர்களாகத் தான் பார்க்கிறேன், அவர்களும் அப்படித்தான் என்மீது பாசம் காட்டுகின்றனர். எங்கள் மூவரின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதையும், சமூக வலைதளங்களின் மூலம் சண்டை போடுவதையும் நிறுத்த வேண்டும். சமூக வலைதளங்களின் மூலம் என்னைத் தொடர முடியாத அளவுக்கு நீங்கள் உங்கள் வேளைகளில் பிஸியாக இருந்தால் எனக்கும் சந்தோஷமே என்று கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் மூவரும் நண்பர்கள் எனும்போது இந்த 1,2,3 என்ற விளையாட்டு, நீங்கள் அடித்துக் கொள்வதை எனது நண்பர்களான அமீர் மற்றும் ஷாரூக் கூடஇதனை விரும்புவதில்லை. இதனைப் புரிந்து கொண்டு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்கள் தினசரி சமூக வலைதளங்கள் மூல அடித்துக் கொள்வதும், இந்த சண்டைகளை இந்திய அளவில் முன்னிறுத்துவதும் தினசரி நடக்கிறது. சல்மான் போல அஜித் மற்றும் விஜய் ஆகியோர் தங்கள் ரசிகர்களை மாற்ற முயல்வார்களா என்ற கேள்வி தற்போது தமிழ்த் திரையுலகில் எழுந்துள்ளது.

 

Post a Comment