சென்னை: திரிஷாவுக்கு ஒரு வித்தியாசமான ஆசை வந்துள்ளதாக சொல்கிறார்கள். அதிரடியான, அதிரிபுதிரியான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் அது.
நடிப்பில் பல ரகம் உண்டு. இந்த பல ரகங்களையும் பலகாரம் போல சாப்பிட்டு அனுபவிக்கும் "பாத்யதை"யை தமிழ் சினிமா உலகம், நடிகர்களுக்கு மட்டுமே கொடுத்து வந்துள்ளது.
ஹீரோயின்களுக்கு எப்பவுமே லிமிட்டெட் மீல்ஸ் மட்டுமே. காதல் செய்ய வேண்டும், மரத்தைச் சுற்றி வந்து ஆட வேண்டும், ஹீரோ, வில்லன்களுடன் சண்டை போடும்போது காதை மூடிக் கொண்டு கத்த வேண்டும், ஹீரோவின் பின்னால் மறைந்து பம்மிப் பதுங்கி முகத்தில் பயம் காட்டவேண்டும். இதுபோல சின்னச் சின்ன விஷயங்கள் வரைதான் ஹீரோயின்களுக்கு எல்லை.
சில நேரங்களில் இதைத் தாண்டி அதிரடி நாயகிகளும் வந்து போவதுண்டு. அந்த வகையில் சாதனை படைத்தவர் விஜயசாந்தி மட்டுமே. அதற்குப் பிறகு அவரைப் போல சகலகலாவல்லி ஹீரோயின்களை தென்னகத் திரையுலகம் கண்டதில்லை.
இந்த நிலையில் திரிஷாவுக்கு திடீரென அதிரடியான ரோல்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளதாம். எதிரிகளை அடித்து நொறுக்கி அள்ளிப் போட வேண்டும், அதிரடியான, அடிதடியான ரோல்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் அவரை உந்தித் தள்ளுகிறதாம்.
இந்த ஆசை காரணமாக சமீப காலமாக அவர் ஆக்ஷன் படங்களை அதிகமாக பார்க்கிறாராம். அதுவும் அதிரடி நாயகிகளின் படங்களை அதிகமாக பார்க்கிறாராம்.
ஏன் இந்தத் திடீர் ஆசை என்று தெரியவி்ல்லை. அது மட்டும்தான் பாக்கி. அதையும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்ற நினைப்பில் இப்படி ஆசைப்படுகிறாரோ என்று தெரியவில்லை.
Post a Comment