சென்னை: தமிழ் சினிமாவின் தற்போதைய காதல் மன்னன் ஆர்யா, காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். இணைந்து நடிக்கும் அத்தனை நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நடிகர் ஆர்யாவாகத்தான் இருப்பார்.
அவருக்கு தற்போது அவரது வீட்டினர் மும்முரமாக பெண் தேடிக் கொண்டிருக்கின்றனர், இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "எனது திருமணம் கண்டிப்பாக காதல் திருமணமாகத் தான் இருக்கும்.
திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக எல்லாம் திருமணம் செய்ய முடியாது, மனதுக்கு பிடித்தப் பெண்ணை தேடிப் பிடித்து திருமணம் செய்து கொள்வேன். மனதுக்குப் பிடித்த பெண் அமைந்து விட்டால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
முதலில் அவரைக் காதலித்து அதன் பிறகே திருமணம் செய்து கொள்வேன்" என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஆர்யா.
Post a Comment