சென்னை: மற்ற பாடகர்களைப் போல தானும் நடிகராகி விட வேண்டும் என களத்தில் இறங்கினார் இந்த நடிகையின் கணவர். ஆனால், இவர் நடித்த படம் எதிர்பார்த்த ஆனந்தத்தை ஆரம்பித்து வைக்கவில்லை.
ஆனாலும், விடாப்பிடியாக தொடர்ந்து நாயகனாகவே நடிப்பேன் என அடம் பிடிக்கிறாராம். தனக்கென ஒரு படத்தை மனைவியை தயாரிக்கச் சொல்லிக் கேட்டாராம்.
ஏற்கனவே, கணவரை நாயகனாகப் போட்டு படம் எடுத்து கையைச் சுட்டுக் கொன்ற மனைவிகளின் கதை தெரிந்த மனைவி, நடிப்பு ஆசையை மூட்டைக் கட்டி பரணில் போட்டு விட்டு மீண்டும் பாடத் தொடங்குங்கள் எனக் கறாராகச் சொல்லி விட்டாராம்.
இதனால், ஸ்டூடியோ, ஸ்டூடியோவாக மீண்டும் தூது விடும் படலத்தை தொடங்கியிருக்கிறாராம் பாட்டுக்காரக் கணவர்.
Post a Comment