சென்னை: கடந்த வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியான பாபநாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்று இருக்கிறது. படம் வெளியாகி இன்றோடு 4 நாட்கள் ஆகின்றன.
இதுவரை வசூலில் (உலகம் முழுதும்) சுமார் 25 கோடியைத் தொட்டு இருப்பதாக, வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதே ரீதியில் சென்றால் விரைவில் 100 கோடியைத் தொட்டு விடும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளனர்.
உத்தம வில்லன் திரைப்படத்தால் வாடிப்போயிருந்த கமல், பாபநாசத்தின் வெற்றியால் மகிழ்ந்து போய் இருக்கிறார். எனவே இந்த வெற்றியை பாபநாசம் குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கிறார்.
கமல், கவுதமி, இயக்குநர் ஜீது ஜோசப், இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் தயாரிப்பாளர் என குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த விழாவில், பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் மறந்தும் கூட அழைப்பு விடுக்கப்படவில்லையாம்.
அதுசரி உண்மையான வெற்றிப்படத்திற்கு விளம்பரம் எதற்கு?
Post a Comment