பாயும் புலின்னா என்னன்னு தெரியுமா?

|

சென்னை: பாண்டியநாடு திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குநர் சுசீந்திரனும் நடிகர் விஷாலும் 2 வது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் பாயும்புலி. பாண்டியநாடு திரைப்படம் அடைந்த மாபெரும் வெற்றி காரணமாக இந்தப் படம் ரசிகர்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.

நடிகர் விஷாலிற்கு ஜோடியாக நடிகை காஜல் நடிக்கும் இந்தப் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறாராம் விஷால். மதுரையைப் பின்னணியாகக் கொண்ட போலீஸ் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

Paayum Puli Movie Story

ஒருவன் யாரை வேண்டுமானாலும் கொலை செய்துவிட்டு தப்பித்து விடலாம் ஆனால் ஒரு போலீசைக் கொலை செய்து விட்டு சட்டத்திடம் இருந்து தப்ப முடியாது என்பதே பாயும் புலி படத்தின் கதை.

பாயும் புலி என்ற பெயரில் ஏற்கனவே ரஜினியின் திரைப்படம் ஒன்று வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது , ரஜினியின் மேல் அப்படி என்ன காதலோ தெரியவில்லை தொடர்ந்து தனது படங்களில் ரஜினியின் தலைப்புகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார் இயக்குநர் சுசீந்திரன்.

இதுவரை சுசீந்திரன் இயக்கியிருக்கும் படங்களின் எண்ணிக்கை மொத்தம் 8, இதில் 3 (பாயும் புலியையும் சேர்த்து) ரஜினியின் படத்தலைப்புகள் தான்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் சூரியின் காமெடி, காஜலின் கெமிஸ்ட்ரி ஆகியவை நன்றாக வந்திருப்பதாக சொல்கிறார்கள். காதல், காமெடி, ஆக்க்ஷன், செண்டிமெண்ட் என எல்லாம் சேர்ந்த கலவையாக படம் இருக்கும் என்று படத்திற்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

பாயும் புலியா? பாயாத புலியான்னு? படம் வந்தாத்தானே தெரியும்...

 

Post a Comment