சிம்பு தன்னை அஜீத் ரசிகன் என வெளிப்படையாகச் சொல்லிக் கொள்பவர். ஆனால் அதையெல்லாம் பார்க்காமல், அவருக்கு காலத்தே ஒரு பேருதவி செய்திருக்கிறார் விஜய் .
வாலு படம் வெளியாக முடியாமல் எந்த அளவு திண்டாடி வருகிறது என்பதை அனைவரும் அறிவார்கள். அந்தப் படம் இப்போது நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபட்டுள்ளது. ஆனால் நிதிச் சிக்கல் தீரவில்லை.
விஷயத்தைக் கேள்விப்பட்ட விஜய், எவ்வளவு தொகை என்பதை விசாரித்து அதைத் தானே முழுவதும் செலுத்துவதாகவும், ஆனால் படத்தை தான் சொல்லும் விநியோகஸ்தருக்கு மட்டுமே தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.
மேலும் தான் செய்யும் இந்த உதவியை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறி அமைதியாக ஒதுங்கிக் கொண்டாராம்.
வாலு படம் ஆகஸ்ட் 14-ல் வெளியாகப் போவதாக அறிவிப்பு வந்ததன் பின்னணி விஜய் செய்த இந்த பெரும் உதவிதான் என்கிறார்கள்.
Post a Comment