அமலா பால் தயாரிப்பில், ப்ரியதர்ஷன் இயக்கும் படத்தின் தயாரிப்பாளர் குறித்து இயக்குநர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தப் படம் முடிக்கும் வரை யாரையும் இசையமைப்பாளராக அறிவிக்கப்போவதில்லை என்றும், படத்தை ஏ ஆர் ரஹ்மான் பார்த்து பிடித்திருந்தால், அவரே இசையமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜய் அளித்துள்ள விளக்கம்:
எனது குரு பிரியதர்ஷனின் மானசீகமான படம் இது. தேசிய, சர்வதேச தரத்திலான படத்திற்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைப்பின் அவசியத்தை அறிந்துள்ளோம். சர்வதேச அடையாளத்தை எதிர்நோக்கும் இப்படத்தில் எல்லைகளை தாண்டி உணர்வுகளை கொணரும் இசையும் அவசியம். தற்போது பிரியதர்ஷன் படப்பிடிப்பிற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
முழு படப்பிடிப்பும் முடிந்த பின்னர் படத்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு காண்பிக்க இருக்கிறோம். படத்தை பார்த்த பிறகு அவருக்குப் பிடித்திருந்தால் இப்படத்திற்கு பின்னணி இசையமைப்பார்.
பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன் மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோரது நடிப்பின் பெரும் பங்கும், திறன் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் பிரியதர்ஷனின் காட்சிகளுக்கு பேருதவியாய் இருக்கும்."
Post a Comment