மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகை பரவை முனியம்மாவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
பிரபல நடிகையான பரவை முனியம்மா கடைசியாகத சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே படத்தில் பாட்டுப் பாடி நடித்திருந்தார்.
அதன் பிறகு பரவை முனியம்மாவுக்கு படங்கள் இல்லை. வருமானமும் இல்லை. முதுமை காரணமாக உடல் நலக்கோளாறு ஏற்பட, மருத்துவமனையில் கஷ்டப்பட்டு வந்தார். மருந்து வாங்கவும் பணம் இல்லாமல் அவர் அவதிப்பட்டதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட, இப்போது அவருக்கு உதவிகள் வர ஆரம்பித்துள்ளன.
முதல் கட்டமாக நடிகர் விஷால், ரூ 5000 முன்பணமும், மாதாமாதம் அதே தொகையை வழங்கப் போவதாகவும் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து தனுஷ் பரவை முனியம்மாவுக்கு ரூபாய் 5 லட்சம் பண உதவியும் வழங்கியிருக்கிறார்.
நேற்று பரவை முனியம்மா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார் நடிகர் சிவகார்த்திகேயன். பரவை முனியம்மாவை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடம் பரவை முனியம்மாவின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். பண உதவி செய்தாரா என்ற விவரம் வெளியாகவில்லை.
Post a Comment